சப் கலெக்டர் முதல் முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி வரை... சாந்தா ஷீலா நாயர் பயணம்
தமிழக அரசியலில் மிகவும் முக்கியமான காலக்கட்டத்தில் முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி பதவியில் இருந்து சாந்த ஷீலா நாயர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: 2016ம் ஆண்டு ஜூன் மாதம் முதல், முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்த ஷீலா நாயர், திட்டக் குழுவின் தலைவராக இருந்தவர்.
தனது சொந்த காரணங்களுக்காக தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை ராஜினாமா செய்வதாக சாந்த ஷீலா நாயர் கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ள ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயரின் திடீர் ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

•கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சாந்தா ஷீலா நாயர். இவர் 1973ம் ஆண்டு தமிழக பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாவார். சாந்தா ஷீலா நாயர், திண்டுக்கல் உதவி ஆட்சியராகவும், திருச்சி மாவட்ட ஆட்சியராகவும் திறம்பட பணியாற்றியவர்.
•இவர் தமிழகத்தில் பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளராக இருந்துள்ளார். தமிழக அரசின் உள்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராகவும், சென்னை பெருநகர குடிநீர் வாரிய தலைவர் உள்பட பல பொறுப்புகளில் முத்திரைபதித்தவர்.
•மத்திய அரசாங்கத்தின் கனிமவளத்துறை செயலாளராக பணியாற்றினார். கடந்த 2010ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். டெல்லியில் பணியாற்றி ஓய்வுபெற்றவுடன், கடந்த 2011ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு பதவி ஏற்றபோது, திட்டக்குழு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த பதவியில் 5 ஆண்டுகள் திறமையாக பணி புரிந்தார்.
•2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்த உடன் தனிப்பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டார் சாந்தா ஷீலா நாயர்.
•கூடுதல் முதன்மை செயலராக இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி என்றாலும், சாந்த ஷீலா நாயரின் அனுபவமும், திறமையும் தனது அரசுக்கு தேவை என்பதால், அவருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனிப்பிரிவு அதிகாரி பதவியைக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
•கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக, அதிமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தும் பணிகளை சாந்தா ஷீலா நாயர் மேற்பார்வை செய்துவந்தார். தற்போது திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக, ஷீலா நாயர் கூறியுள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தில், சொந்த காரணங்களுக்காக, பதவி விலகுகிறேன் என, சாந்தா ஷீலா நாயர் தெரிவித்துள்ளார்.
•ஜெயலலிதாவினால் நியமிக்கப்பட்டு பல ஆண்டுகள் அவருக்கு கீழே பணியாற்றிய பல அதிகாரிகள் தற்போது தங்களின் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா












Click it and Unblock the Notifications