உச்சக்கட்டத்தை எட்டும் மோதல்: விஷால் மீது சரத்குமார் கிரிமினல் வழக்கு
சென்னை: தான் ஊழல் செய்ததாக நடிகர் விஷால் பொய் பிரச்சாரம் செய்து வருவதாகக் கூறி அவர் மீது நடிகர் சரத்குமார் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வரும் 18ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் பாண்டவர் அணியும் போட்டியிடுகிறது. இரு அணியினரும் மாநிலத்தில் உள்ள நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்கள்.

அதே சமயம் ஒரு அணியை மற்ற அணியினர் தாக்கிப் பேசியும் வருகிறார்கள். எங்கள் அணிக்கு தான் நாடக நடிகர்களின் ஆதரவு உள்ளது என்று இரு அணியினரும் மாறி மாறி கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் சரத்குமார் விஷால் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
நான் ஊழல் செய்துள்ளதாக எந்தவித ஆதாரமும் இன்றி விஷால் பல இடங்களில் தெரிவித்து வருகிறார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மாமனும், மச்சானுமாக சேர்ந்து அனைவருக்கும் பொதுவான சொத்தான நடிகர் சங்கத்தை இடித்துவிட்டனர் என்று சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது வடிவேலு குற்றம் சுமத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications