சமக இனி எப்போதும் தனித்தே போட்டியிடும் - சரத்குமார்
ஆர்.கே. நகரில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது அனைத்து தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம் என்று கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சமக தனித்து போட்டியிடுகிறது. இனி வரும் காலங்களிலும் சமக தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். ஆர். கே. நகரில் எங்களின் தனித்துவத்தை நிரூபிப்போம் என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 16ஆம் தேதி தொடங்கியது.
திமுக, அதிமுக சசிகலா அணி, அதிமுக ஓபிஎஸ் அணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சி, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, என ஆர்.கே. நகரில் பலமுனை போட்டி நிலவுகிறது.

சமக தனித்து போட்டி
சமத்துவ மக்கள் கட்சியும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக சரத்குமார் நேற்று அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுகிறது. கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.அந்தோணி சேவியரை வேட்பாளராக அறிவிக்கிறேன். வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ராயபுரம் கே.விஜயன் மாற்று வேட்பாளராக இருப்பார் என்று கூறினார்.

வேட்புமனு தாக்கல்
இன்று சமக வேட்பாளர் அந்தோணி சேவியர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், சமக இனி எப்போதும் தனித்தே போட்டியிடும் என்று கூறினார்.

மக்கள் ஆதரவு
எங்களின் கட்சி பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று தனித்தே போட்டியிட முடிவு செய்ததாக கூறினார் சரத்குமார். தனியாக போட்டியிட்டு எங்களின் தனித்துவத்தை நிரூபிப்போம் என்றும் சரத்குமார் கூறினார். மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவு இல்லையே
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு சென்று ஆதரவு அளித்தார் சரத்குமார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தொகுதியை சுற்றி வந்த அவர் ஆதரவு வேறு தேர்தல் கூட்டணி வேறு என்று கூறிவிட்டு தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளார் சரத்குமார். ஓபிஎஸ் அறிவித்த வேட்பாளருக்கு எதிராக தனது கட்சி வேட்பாளரை களமிறக்கியுள்ளார் சரத்குமார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications