இப்பவே கேளுங்க நாட்டாமை
சென்னை: கட்சியில இருந்தது 2 எம்.எல்.ஏ... இதுல ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிய, சமக இனி 'சரத்குமார் மக்கள் கட்சி' என்று அழைக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல்கள் வரிசை கட்ட நாட்டாமையோ நான்தான் உண்மையான சமக என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.
கட்சியை விட்டு நீக்கப்பட்ட துணைத்தலைவரான ஜாதி சங்கத்தைச் சேர்ந்தவரோ நாட்டாமை தீர்ப்பு செல்லாது... செல்லாது.. நான் கட்சியைக் கைப்பற்றுவேன் என்று சபதம் விட்டு கிலியை ஏற்படுத்தி வருகிறார்.
சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்று தொண்டர்களிடம் கேட்டு முடிவெடுப்பேன் என்று சொன்னாலும் சொன்னார் சரத்குமார். பேஸ்புக், டுவிட்டரில் அல்வா கிண்டுகின்றனர்
இப்பவே கேளுங்க
கட்சியில இருக்கிறது 2 பேர்தானே இப்பவே கேளுங்க நாட்டாமை என்கின்றனர் சிலர்
|
காது கேட்கலையே...
நாங்க இன்னமும் அதிமுக கூட்டணியிலதான் இருக்கிறோம் என்ற சரத்குமாரின் கருத்துக்குத்தான் இந்த மீம்ஸ்.
நானும் ரவுடிதான் படத்தை எதுக்கு போட்டிருக்காங்க புரியுதா?
|
அடிச்சு கூட கேட்பாங்க
கடைசியில சுயம்புலிங்கம் அண்ணாச்சியும் சிக்கிட்டார் நம்ம அண்ணாச்சிக்காக.
|
உடைக்க முடியாது
சமகவை யாராலும் உடைக்க முடியாது... நாங்களே உடைச்சாத்தான்.
|
யார் சொன்னது
சட்டசபையில் அதிமுகவினரை விட அதிகமாக மேஜையை தட்டியது சரத்குமார்தான். ஆனால் இப்போது கூட்டணி மாறப்போவதாக பரவி வரும் செய்திக்குத்தான் இந்த அதிர்ச்சி மீம்