சாலை அமைத்து தரக் கோரி தென்காசியில் சரத்குமார் அலுவலகம் முற்றுகை
தென்காசி: சாலை அமைத்து தரக் கோரி தென்காசியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சரத்குமார் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தென்காசி 19-ஆவது வார்டு சொர்ணபுரம் மேட்டுத்தெருவில் இணைப்பு சாலை அமைத்து தருவதாக வாக்குறுதியளித்துள்ளார்.

அப்போது நகராட்சி சாலை அமைக்கவில்லையெனில் தனது சொந்த செலவில் அமைத்து தருவதாகவும் அவர் கூறியதாக கூறப்படுகிறது.ஆனால் இது வரை அந்த இணைப்பு சாலைக்கு தீர்வு கிடைத்த பாடில்லை.
இதனைத்தொடர்ந்து அந்தப் பகுதி பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட ஆண்களும்,பெண்களும்,இன்று தென்காசிக்கு சட்டமன்ற உறுப்பினர் சரத் குமார் வருவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவரது அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
இதனைக்கண்ட அலுவலக மேலாளர் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகைப் போரட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது குடும்ப அட்டைகளையும் ஒப்படைக்க கொண்டு வந்தனர். ஆனால் யாரும் இல்லாததால் அவர்கள் வேதனையோடு திரும்பி சென்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications