நடிகர் சங்கத்தின் ஊழல் புகாரை சட்டப்படி சந்திப்பேன்- சரத்குமார்
சென்னை: நடிகர் சங்கத்தின் ஊழல் புகாரை சட்டப்படி சந்திப்பேன் என்று நடிகரும், முன்னாள் நடிகர் சங்கத் தலைவருமான சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.
பலமுறை கேட்டும் சரத்குமார் நடிகர் சங்கத்தின் கணக்கு, வழக்குகளை ஒப்படைக்க முன்வரவில்லை. இதனால் அவர்மீது ஊழல் புகார் அளிக்கலாம் என்று நேற்று முன்தினம் நடந்த நடிகர் சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நடிகர் சங்கத்தில் பலகோடி ரூபாய் பணத்தை சரத்குமார் ஊழல் செய்தததாக, இன்று காலை நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில் சென்னை கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில், நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் இந்த புகார் மனுவை அளித்தனர்.
இந்தப் புகாருக்கு நடிகர் சரத்குமார் "ஊழல் புகார் மனு குறித்த எந்த தகவலும் எனக்கு வரவில்லை. புகாரை சட்டரீதியாக எதிர்கொள்வேன்" என்று பதிலளித்திருக்கிறார்.
சரத்குமார் மீதான நடிகர் சங்கத்தின் ஊழல் புகாரானது, தமிழ்த்திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











Click it and Unblock the Notifications