ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை!
சென்னை: தமிழகம் மட்டுமல்லாது மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்களிலும் மாடுபிடி விளையாட்டுகள் வேண்டும் என்று எழுந்துள்ள மக்கள் குரலை நிறைவேற்றுகிற வகையில் மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொங்கல் திருநாள் விரைவில் வர இருக்கிற சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்கள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.

தமிழகத்தில் ஏறத்தாழ 150-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றுவந்தது. ஆனால் பல்வேறு கெடுபிடிகள் காரணமாகவும், அரசின் அனுமதி பெற்று உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி நடத்த வேண்டிய சூழ்நிலை காரணமாகவும், கடந்த ஆண்டு ஏறத்தாழ 30 இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி அதிகாரபூர்வமாக நடத்தப்பட்டது.
இத்தகைய நிலை நீடித்தால் ஜல்லிக்கட்டு என்ற ஒரு மாடுபிடி வீர விளையாட்டு இருந்தது என்று புத்தகங்களில் மட்டுமே எதிர்கால சந்ததியினர் வாசிக்க முடியும். இத்தகைய சூழ்நிலையில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டுவதில் எப்பொழுதும் முன்னோடியாக விளங்குகிற ஜெயலலிதா, ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு தொடர்ந்து நடைபெறுவதற்கு ஆவண செய்து ஜல்லிக்கட்டை நடத்தும் அறிவிப்பை இனிப்பான பொங்கல் செய்தியாக அறிவிக்கச் செய்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
அதே போன்று, தமிழகம் மட்டுமல்லாது மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்களிலும் மாடுபிடி விளையாட்டுகள் வேண்டும் என்று எழுந்துள்ள மக்கள் குரலை நிறைவேற்றுகிற வகையில் மத்திய அரசும் அவசர நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications