எனக்கு ஆதரவா நிச்சயம் சரத்குமார் பிரச்சாரம் செய்வார்!- கருணாஸ்
மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் இருக்கிறார் நடிகர் கருணாஸ். அவர் ஆரம்பித்தது கட்சி கூட அல்ல.. முக்குலத்தோர் பெயரில் ஒரு இயக்கம். ஆரம்பித்த சில ஆண்டுகளுக்குள் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு முதல்வர் ஜெயலலிதா அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்.
திருவாடனை தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் கருணாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, உற்சாகம் பொங்கப் பேசினார்.

முதல்வர் உங்களுக்கு சீட் கொடுப்பாங்கன்னு எதிர்ப்பாத்தீங்களா?
நிச்சயமா எதிர்ப்பார்க்கல. நான் அம்மாவைப் பார்த்து ஆதரவு கொடுத்தது சீட் கேட்பதற்காக அல்ல. எங்களுக்கும் ஒரு அங்கீகாரம் வேணும். சமுதாய மக்களுக்கு ஏதாவது செய்யணும்னுதான். எனக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சிதான்.
இந்த தேர்தலுக்காகவே முக்குலத்தோர் புலிப்படையை உருவாக்கினதா சொல்றாங்களே?
நான் இந்த அமைப்பை உருவாக்கி ஏழு வருசமாச்சி. தேர்தலுக்காக இதை உருவாக்க. மக்களுக்கு உதவிகள் செய்யத்தான் தொடங்கினேன். எத்தனை பேரு இந்த அமைப்பு மூலம் படிக்க உதவி பெற்றிருக்கிறார்கள் தெரியுமா? 2011-லேயே நான் அம்மாவைப் பாத்திருக்கலாம். ஆனா போகல. ஒரு நடிகனா செய்யறதை விட, அரசியல் களத்துல இருந்து அதிகமாக செய்ய முடியும்னு நினைச்சதாலதான் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிச்சேன்.
நடிகர் சங்கத் தேர்தல்ல கடுமையா மோதிக்கிட்ட நீங்களும் சரத்குமாரும் இப்போ ஒரே அணியில்... இதை எப்படிப் பாக்கறீங்க?
நாங்க எங்கே மோதிக்கிட்டோம்? இருவரும் அடிப்படையில் நடிகர்கள். நடிகர் சங்க உறுப்பினர்கள். எதிரெதிர் அணியில் நின்று போட்டியிட்டோம். தேர்தல் முடிந்த உடனே அந்த பிரச்சினை முடிந்துவிட்டது. இப்போது இருவரும் அரசியல் களத்தில் ஒண்ணா இருக்கோம். சரத்குமார் சீனியர். அரசியலில் நல்ல அனுபவசாலி. அவரது அனுபவம் என் வெற்றிக்கும் உதவும்னு நம்பறேன்.
இருவரும் சேர்ந்து ஒரே மேடையில் பிரச்சாரம் பண்ணுவீங்களா?
நிச்சயமா.. அதிலென்ன சந்தேகம். எனக்காக சரத்குமாரும், அவருக்காக நானும் பிரச்சாரம் பண்ணுவோம். இருவரும் இணைந்து அதிமுக வெற்றிக்காகப் பிரச்சாரம் பண்ணுவோம்!
அட்றா சக்க!












Click it and Unblock the Notifications