முதல்வர் எதிர்க்கட்சியினரை பார்த்து சிரிக்கக்கூடாதா? சசிகலாவின் அரசியல் நாகரிகம் இவ்வளவுதானா?
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சியினரை பார்த்து சிரித்ததாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சியினரை பார்த்து சிரித்ததாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். சசிகலாவின் இந்த பேச்சு அவருக்கு அரசியல் அனுபவமும் நாகரிகமும் கொஞ்சமும் இல்லை என்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஓபிஎஸ் கூறிய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் அதிர்ந்துபோன சசிகலா முதல் முறையாக நள்ளிரவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது முதல்வர் ஓபிஎஸின் குற்றச்சாட்டுகளுக்கு பின்னணியில் திமுக இருப்பதாக கூறினார். அதற்கு அவரே காரணமும் தெரிவித்தார்.
என்னவெனில் சட்டசபைக்கூட்டத்தின் போது முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் என்றும் அவர்கள் சிரித்துக்கொண்டன என்றும் சசிகலா கூறினார். அவரது இந்த விளக்கம் சசிகலாவுக்கு அரசியல் அனுபவமும் நகரிகமும் அறவே இல்லை என்பதை காட்டுவதாக உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொஞ்சம் அரசியல் அனுபவமும் அரசியல் நாகரிகமும் இல்லாதவர் கையில் ஆட்சி சென்றால் எப்படி இருக்கும் என்றும் மூத்த பத்திரிக்கையாளர்களும், அரசியல் விமர்சகர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications