ஓரளவுத்தான் பொறுமை காப்போம்- அன்று சசிகலா.... மரியாதை கெட்ரும் - இன்று தினகரன்
ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்காததற்கு அன்று அவரை சசிகலா எச்சரிக்கை விடுத்தது போல் இன்று தினகரனும் மரியாதை கெட்டுபோய்விடும் என்ற தொணியில் பேசியுள்ளார்.
Recommended Video

சென்னை: சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோர ஆளுநர் காலம் தாழ்த்தியதால் ஓரளவுத்தான பொறுமை காப்போம் என்றார். அதேபோல் முதல்வரை மாற்றுமாறு தம் தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆளுநருக்கு உண்டான மரியாதை போய்விடும் என்று தினகரன் அவதூறாக பேசியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவின் பொது செயலாளர் பதவியை சசிகலா ஏற்றுக் கொண்டார். அதேபோல் முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸை பதவி விலக கூறிவிட்டு சட்டசபை குழு தலைவராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதன் மூலம் தமிழகத்தின் முதல்வராக கனவும் கண்டார்.
எம்எல்ஏ-க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்துடன் தம்மை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று காத்திருந்தார். ஆனால் ஆளுநர் மும்பையிலிருந்து சென்னைக்கு வராமலேயே இருந்தார்.

கூவத்தூரில் கொதித்த சசி
அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அல்லது திமுகவினரிடம் விலை போக கூடும் என்று எண்ணிய சசி தம் தரப்பு ஆதரவு எம்எல்ஏக்களை கூவத்தூரில் தங்க வைத்திருந்தார். எனினும் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் ஆவேசமடைந்த சசிகலா, கூவத்தூரில் இருந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது ஓரளவுக்குத்தான் பொறுமை காக்க முடியும் என்றார்.

ஆளுநரை மிரட்டும் தொணி
இது காலம் தாழ்த்தி வந்த ஆளுநருக்கு விடுக்கப்பட்ட மிரட்டலாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிமுக பொது குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனமும், அவரது உத்தரவுகளும், மற்ற நியமனங்களும் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எதிர்வினையாற்றிய தினகரன்
அதிமுகவின் தீர்மானங்களுக்கு மதுரையில் தினகரன் எதிர் வினையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் எங்கள் தரப்பு எம்எல்ஏ-க்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அளித்த கடிதத்திற்கு இன்னும் 2 தினங்களுக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் மரியாதை கெட்டுவிடும்
இல்லாவிட்டால் ஆளுநர் தனக்கு உண்டான மரியாதை போய்விடும் என்று ஆளுநரை எச்சரிக்கும் தொணியில் பேசியுள்ளார். தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுப்பது, ஆளுநரை மிரட்டுவது இதெல்லாம் மன்னார்குடி கும்பலுக்கே உரிய ஸ்டைல் என்று பொதுமக்கள் முணுமுணுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications