நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல 2சி+3சிX123; 50x10எல் பகீர் தகவல்கள்
நாளைய் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்காக அதிர வைக்கும் பேரங்கள் கூவத்தூரில் அரங்கேறியுள்ளதாம்.
சென்னை: சட்டசபையில் நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்காக கூவத்தூரில் அரங்கேறிய பேரங்கள் அதிர வைக்கின்றன.
அதிமுக எம்.எல்.ஏக்கள் 10 நாட்களாக சசிகலா கோஷ்டியால் கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த எம்.எல்.ஏக்கள் 10 நாட்களாக எந்தவித கவலையுமில்லாமல் வாழ்க்கையை 'அனுபவித்து' கொண்டிருக்கின்றனர்.
கடும் கோபத்தில்...
அதிமுக ஆட்சி நிலைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒற்றுமையாக சுதந்திரமாக இருக்கிறோம்; பாதுகாப்பாக இருக்கிறோம் என வட இந்திய தாதாக்களின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு பொம்மைகளாக பேசி வருகின்றனர் எம்.எல்.ஏக்கள். இதனால் அத்தனை தொகுதி மக்களும் எம்.எல்.ஏக்கள் மீது மிக கடுங்கோபத்தில் இருந்து வருகின்றனர்.
5 சி
இந்த நிலையில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் 5சி வைட்டமின் ப பேரமாக பேசப்பட்டதாம். இதில் முதல் தவணையாக 2 சி அனைத்து எம்.எல்.ஏக்கள் உறவுகள் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாம்.
10எல்
அத்துடன் அதிமுக அரசு நீடிக்கும் வரையில் ஒவ்வொரு மாதத்துக்கும் 10எல் 'ஊதியமாக' தரப்படுமாம். சீனியர்களுக்கு வாரியங்கள் ரெடியாக உள்ளதாம்.
வாரியங்கள், அமைச்சர் பதவிகள்
இவ்வளவுக்கு பின்னும் திருப்தி அடையாத பேராசை திலகங்களுக்காகவே அமைச்சரவை அடிக்கடி மாற்றி அமைக்கப்பட்டு ஒவ்வொரு இலாகாவுக்கும் ஒரு தனி அமைச்சர்.. என உறுதி கொடுக்கப்பட்டுள்ளதாம்.