ஆதரவை தக்க வைக்க கவுண்டர்கள், தலித்துகள், வன்னியர்களுக்கு சசி கேபினட்டில் அதிக முக்கியத்துவம்?
முதல்வர் பதவியில் அமர மும்முரமாகிவிட்டார் சசிகலா. அவரது அமைச்சரவையில் அதிருப்தி ஜாதியினருக்கு கூடுதல் இடங்கள் கிடைக்குமாம்.
சென்னை: அதிமுகவில் தமக்கு எதிராக ஜாதி ரீதியாக கிளம்பியுள்ள அதிருப்தியை சமாளிக்கும் வகையில் முதல்வராகும் சசிகலா அமைச்சரவையில் கவுண்டர்கள், தலித்துகள் மற்றும் வன்னியர்களுக்கு கூடுதல் இடம்தர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய சசிகலா அடுத்து முதல்வர் நாற்காலியை நோக்கி வேகமாக நகருகிறார். முதல்வர் பன்னீர்செல்வத்திடம் இருந்து ராஜினாமா கடிதத்தை பெற்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாளை முதல் சந்திப்பு நாடகம்
பொதுச்செயலர் பதவியை கைப்பற்ற எப்படி ஒரு நாடகம் 25 நாட்கள் நடத்தப்பட்டதோ அதேபோல் முதல்வர் பதவியை கைப்பற்ற 2-ம் கட்ட நாடகம் நாளை முதல் அரங்கேற இருக்கிறது. அதிமுக மாவட்ட நிர்வாகிகளை சசிகலா நாளை முதல் சந்திக்க உள்ளார்.

அமைச்சர் பதவி உண்டு...
இச்சந்திப்போது அதிருப்தியில் உள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு பதவிகள் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட உள்ளது. அதேபோல் கவுண்டர்கள், தலித்துகள், வன்னியர்களுக்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற அதிருப்தியை போக்கவும் வாக்குறுதி அளிக்கப்பட இருக்கிறது.

நிலவரம் இதுதான்..
தற்போதைய அமைச்சரவையில் 28 கவுண்டர் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களில் 3 பேர்தான் அமைச்சர்கள். 32 தலித்துகள் எம்.எல்.ஏ.க்களாக இருந்தபோதும் 3 பேர்தான் அமைச்சர்கள். வன்னியர்களில் 19 பேர் எம்.எல்.ஏ.க்கள். 5பேர் அமைச்சர்களாக உள்ளனர்.

ஜாதிகளுக்கு கூடுதல் அமைச்சர்கள்..
அதே நேரத்தில் தேவர் சமூகத்தினர் 20 பேர்தான் எம்.எல்.ஏ.க்கள். ஆனால் 9 அமைச்சர்கள் உள்ளனர். இதுதான் மற்ற ஜாதியினரின் கடும் அதிருப்திக்கு காரணம். நாளை முதல் நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் நாடகத்தில் சசிகலா முதல்வராகும் போது அமைச்சரவையில் ஜாதி ரீதியாக கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்ற ஆசைவார்த்தையும் காட்டப்பட்டு ஆதரவை தக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications