நானும் இங்கேயே தங்குவேன்: கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை சந்தித்த பின் சசிகலா பேட்டி
சென்னையை அடுத்த கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியுள்ள தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார்.
சென்னை: சென்னையை அடுத்த கூவத்தூரில் சொகுசு விடுதியில் தங்கியுள்ள தமது ஆதரவு எம்.எல்.ஏக்களை மூன்றாவது முறையாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று மாலை சந்தித்து பேசினார். அப்போது தாமும் இங்கேயே தங்கி இருக்க போவதாக அவர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே கூவத்தூரில் 90 அதிமுக எம்.எல்.ஏக்களை மன்னார்குடி குண்டர்கள் கட்டுப்பாட்டில் சசிகலா சிறை வைத்துள்ளார். கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதனால் கடந்த 2 நாட்களாக கூவத்தூருக்கு சென்று அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் சசிகலா ஆதரவு திரட்டினார். இன்றும் கூவத்தூருக்கு சசிகலா சென்றார். எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சசிகலா சந்தித்தார்.
அப்போது சசிகலா கூறியதாவது: கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்கள் அனைவரும் சந்தோசமாகவும் ஒற்றுமையுடனும் குடும்பமாக இருக்கின்றனர். உயிருள்ளவரை அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை காப்பாற்ற வேண்டும்.எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு கட்சியை ஒருங்கிணைத்தவர் ஜெயலலிதா. ஒவ்வொரு மக்களின் மனதிலும் இடம்பிடித்தவர் ஜெயலலிதா.
மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே சென்று தீர்க்க வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அதியமிக்க வகையில் அமைக்கப்படும். சோதனை காலத்தில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானவர் ஜெயலலிதா. நாளை கூவத்தூரில் இருந்து செல்லும் போது அனைவரும் சந்தோஷமாக செல்வோம். இன்று நானும் இங்கேயே தங்கப்போகிறேன் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications