ஆட்டத்தை தொடங்கினார் சசிகலா... போயஸ் கார்டனில் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் அதிரடி ஆலோசனை!

சென்னை போயஸ் கார்டனில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அடுத்த பொதுச்செயலர் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவை கையில் எடுத்திருக்கும் சசிகலா அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ஜெயலலிதாவுக்குப் பின்னர் அதிமுகவின் எதிர்காலம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவையும் ஆட்சியையும் தமது கட்டுப்பாட்டில் வைக்க சசிகலா வெளிப்படையாக அரசியல் களத்துக்கு வர வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நேரடி அரசியல் இல்லை?

நேரடி அரசியல் இல்லை?

ஆனால் உடனடியாக நேரடி அரசியலுக்கு வருவதை சசிகலா விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் தமது ஆதரவாளர்களை கட்சியின் பொதுச்செயலர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு கொண்டு வந்தாக வேண்டிய நிலையில் சசிகலா இருக்கிறார்.

அதிரடி ஆலோசனை

அதிரடி ஆலோசனை

இனியும் தாமதிக்காமல் கட்சிப் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்ற நிலையில் உள்ள சசிகலா நேற்று மூத்த அமைச்சர்கள் சிலர் மற்றும் அதிமுக நிர்வாகிகளை போயஸ் கார்டனுக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய பொதுச்செயலர் நியமனம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

சோ உடலுக்கு அஞ்சலி

சோ உடலுக்கு அஞ்சலி

இதனைத் தொடர்ந்து தமக்கு ஆகாதவராக இருந்தபோதும் பத்திரிகையாளர் சோவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் சசிகலா.

இனிதான் இருக்கு...

இனிதான் இருக்கு...

இதேபோல் அடுத்தடுத்து கட்சிப் பணிகளில் தீவிர கவனத்தையும் ஆட்சியின் லகானை இறுகவும் பிடிப்பதில் சசிகலா முனைப்பு காட்டுவார் என்றே கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+