மதுரை கோர்ட்டில் நாளை க்ளைமாக்ஸ்... சசிகலா புஷ்பா புதிய புகாரில் கைது?
சென்னை: போலி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா நாளை ஆஜராக உள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராகும் சசிகலா புஷ்பா புதிய புகாரை வைத்து கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தமது வீட்டில் வேலைபார்த்த பணிப்பெண்கள் இருவர் சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தம்மை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அது போலி முன்ஜாமீன் மனு; வெளிநாட்டில் இருந்து கொண்டு எப்படி மதுரையில் கையெழுத்திட்டதாக கூற முடியும்? என அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனால் நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று சசிகலா புஷ்பாவுக்கு உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா தரப்பு முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், 6 வாரங்களுக்கு சசிகலா புஷ்பாவை கைது செய்ய தடை விதித்தது; அத்துடன் 29-ந் தேதியன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டது.
சிங்கப்பூர் சென்றிருந்த சசிகலா இன்று தமிழகம் திரும்புவார் என தெரிகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சசிகலா புஷ்பா நாளை மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் அனேகமாக புதிய புகார் ஒன்றின் கீழ் கைது செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் சசிகலா புஷ்பாவின் 'நெட்வொர்க்' முழுவதையும் உளவுத்துறை படு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மதுரையில் நாளை பெரும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications