Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்வாண மசாஜ் புகார்: தூத்துக்குடி போலீஸ் ஸ்டேஷனில் சசிகலா புஷ்பாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: நிர்வாண மசாஜ் புகார் தொடர்பாக தூத்துக்குடி புதுக்கோட்டை காவல்நிலையத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடியை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் பானுமதி மற்றும் ஜான்சிராணி ஆகியோர் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மீது பரபரப்பு புகார் கொடுத்தனர். இரவில் மதுபோதையில் சசிகலா புஷ்பாவும் அவரது கணவரும் நிர்வாண நிலையில் மசாஜ் செய்துவிட துன்புறுத்தினர் என்பதும் புகார்களில் ஒன்று.

Sasikala Pushpa appears at Pudhukottai police station

இந்த புகாரின் பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் சசிகலா புஷ்பா. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, கைது செய்யவும் இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல்நிலையத்தில் சசிகலா புஷ்பா இன்று ஆஜரானார். அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+