15 நாட்கள் பரோலில் வெளியே வந்துள்ள சசிகலாவுக்கு சிறைத்துறை கடும் நிபந்தனைகள்!
கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கு மற்றும் ஈமச்சடங்கு காரியங்களை செய்வதற்காக சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்கிறார்.
Recommended Video

சென்னை: கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கு, ஈமச்சடங்கில் பங்கேற்பதற்காக 15 நாட்கள் சிறை விடுப்பு பெற்று சசிகலா சிறையில் இருந்து வெளி வந்துள்ளார். சாலை மார்க்கமாக தஞ்சாவூர் புறப்பட்டுள்ள சசிகலாவிற்கு பல்வேறு நிபந்தனைகளை சிறைத்துறை விதித்துள்ளது.

முதலில் பரோல் மறுப்பு
செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு நடராஜன் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கட்டார். கணவரை பார்க்க வர சசிகலா கடந்த 2 நாட்களாக பரோல் கேட்டு முயற்சித்தார், ஆனால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை பரோல் வழங்கவில்லை.

நடராஜன் மரணம்
இந்நிலையில் அதிகாலை 1.35 மணியளவில் ம. நடராஜனின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வர சசிகால சிறைத்துறையிடம் 15 நாட்கள் பரோல் கோரி இருந்தார்.

15 நாட்கள் பரோல்
காலை 8.30 மணிக்கு பரோல் மனுவில் சசிகலாவின் கையெழுத்தை பெற்று பரோல் மனுவுடன் நடராஜனின் இறப்பு சான்றிதழும் இணைத்து சிறைத்துறையிடம் வழங்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட பெங்களூரு சிறைத்துறையினர் உடல்பரிசோதனைக்குப் பின்னர் சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல் விடுப்பு அளித்தனர்.

தஞ்சாவூர் விரைகிறார்
சிறைத்துறையின் நடைமுறைகள் முடிந்த பின்னர் சசிகலா பிற்பகலில் சிறையில் இருந்து வெளிவந்தார். அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக சசிகலா தஞ்சாவூர் சென்று கொண்டிருக்கிறார். காரில் சசிகலாவுடன் புகழேந்தி மற்றும் சில கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.

சிறைத்துறையின் நிபந்தனைகள்
சசிகலாவிற்கு பரோல் காலத்தில் கடைபிடிக்க சில நிபந்தனைகளையும் சிறைத்துறை விதித்துள்ளது. இதன்படி பரோல் காலத்தில் சசிகலா தஞ்சாவூரை விட்டு வெளியே செல்லக்கூடாது, ஊடகங்களை சந்திக்கக் கூடாது, பொதுக்கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 3 பிற்பகலில் சிறைக்கு திரும்ப வேண்டும்
இதே போன்று அரசியல் தலைவர்களை சந்திக்கக் கூடாது, செல்போன் பயன்படுத்தக் கூடாது. பரோல் முடிந்து ஏப்ரல் 3ம் தேதி பிற்பகலுக்கு பெங்களூரு சிறைக்கு திரும்ப வேண்டும் எனவும் சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications