சசி சிறைக்கு சென்றதை அதிமுக எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் கொண்டாடுகின்றனர்- ஸ்டாலின் கிண்டல்
சசிகலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனையை எம்எல்ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் கொண்டாடுவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதையே அதிமுக எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் தங்கி கொண்டாடி வருவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெடிவெடித்துக் கொண்டாடியதுப் போல் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களும் ரிசார்ட்டில் விழாவாக கொண்டாடுவதகாவும் ஸ்டாலின் கூறினார்.
சென்னை அறிவாலயத்தில் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்குப் பிறகு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்போம் என்றார்.

சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அதனை திமுக வரவேற்கும் என்றும் ஸ்டாலின் கூறினார். இதைத்தொடர்ந்து கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடியதைப் போல் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை அவரது ஆதரவாளர்கள் ரிசார்ட்டில் தங்கி கொண்டாடுவதாக கூறினார்.












Click it and Unblock the Notifications