கூவத்தூரில் இருந்து புறப்பட்ட சசிகலா... சிறைக்கு செல்ல உள்ளதால் அழுது உருகிய எம்எல்ஏக்கள்
பெங்களூரூ நீதிமன்றத்தில் சசிகலா சரணடைய இருப்பதால் நேற்றிரவு கூவத்தூரில் இருந்து புறப்பட்ட அவருக்கு அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர்.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளி என அறிவித்த உச்சநீதிமன்றம் 3 பேரையும் உடனடியாக சரணடைய ஆணையிட்டது. இதையடுத்து கூவத்தூரில் இருந்து நேற்றறிரவு போயஸ்கார்டன் புறப்பட்ட சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர்.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அப்போது சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம், 2015ஆம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கெல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.

ஜெயலலிதா தற்போது உயிரோடு இல்லை என்பதால் அவர் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து சசிகலா உள்ளிட்ட 3 பேரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால் நேற்று முன்தினம் இரவே கூவத்தூர் சென்ற சசிகலா அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்கள் மூலம் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையடுத்து நேற்றிரவு 10 மணியளவில் கூவத்தூரில் இருந்து அவர் தங்கியிருந்த போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கு புறப்பட்டார்.
அப்போது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா உருக்கமாக பேசினார். இதையடுத்து அவரை சுற்றியிருந்த ஆதரவு எம்எல்ஏக்கள் அழுது புரண்டனர். இதனால் தானும் அழுத சசிகலா ஆதரவாளர்களை சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications