For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்கே நகரில் டிடிவி தினகரன் வேட்பாளர்... சசிகலா கடும் அதிருப்தி- விஜயபாஸ்கருக்கு டோஸ்!

ஆர்கே நகர் தொகுதியில் தம்மை வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிக்க வைத்ததில் சசிகலா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகரில் டி.டி.வி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் சசிகலா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்.கே.நகரில் சசிகலா அதிமுக சார்பில் எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயகுமாரை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆட்சி மன்ற குழு கூடும் வரை சுதா விஜயகுமார்தான் வேட்பாளராக இருந்தார்.

Sasikala upsets over Dinakaran as Candidate

ஆனால் ஆட்சி மன்ற குழு கூடிய நிலையில் திடீரென தம்மை வேட்பாளராக அறிவியுங்கள் என தினகரன் கூறியிருக்கிறார். செங்கோட்டையன் உட்பட ஆட்சி மன்ற குழுவினருக்கு கடும் அதிர்ச்சியாகிப் போனதாம்.

இருப்பினும் இதை வெளிகாட்டிக் கொள்ள முடியாமல் வேறுவழியில்லாமல் தினகரனையே வேட்பாளராக அறிவித்துள்ளனார். இத்தகவல் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்ட போது கடும் அதிர்ச்சி அடைந்தாராம்.

அதெப்படி சுதா விஜயகுமாரை தினகரன் மாற்றலாம்? என கொந்தளித்திருக்கிறார். பின்னர் சிறையில் இருந்து தினகரனை தொலைபேசியில் தொடர்பு கொள்ள சசிகலா முயற்சித்திருக்கிறார். ஆனால் தினகரனோ சசிகலாவின் போனையே எடுக்கவில்லையாம்.

Sasikala upsets over Dinakaran as Candidate

இதனால் விஜயபாஸ்கரை போனில் பிடித்து செம டோஸ்விட்டு ஓய்ந்தாராம் சசிகலா. சட்டப்படி போட்டியிட முடியாது என தெரிந்தே வேட்பாளராக தம்மை தினகரன் முன்னிறுத்தியதை சசிகலா அதிமுக தலைவர்கள் பலரும் கூட விரும்பவில்லையாம்.

English summary
According to ADMK Sources said that Sasikala who was in Bangalore Jail very upset over the announcement of Dinakaran as a Candidate in RK Nagar By Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X