மதுரை மீனாட்சி, பழனி முருகனை வழிபட்ட சசிகலா.. ஜெ. வெற்றிக்காக!
மதுரை: முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஊர் ஊராகப் போய் சாமி கும்பிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று காலை அவர் மதுரைக்கு வந்தார். அங்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டார். அதைத் தொடர்ந்து பழனி சென்று முருகன் கோவிலிலும் சாமி கும்பிட்டார்.
சட்டசபைத் தேர்தல் விரைவில் வரவுள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சியும் தயாராகி வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சுக்களும் சூடு பிடித்துள்ளன.
இந்த நிலையில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும், அவர் மீதுள்ள சுப்ரீம் கோர்ட் வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டும் என்று அவர் கோவில் கோவிலாகப் போய் சாமி கும்பிட்டு வருகிறார்.

பல்வேறு கோவில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி வரும் அவர் சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கும்பாபிஷேகத்திலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் இன்று காலை மதுரை வந்த சசிகலா அங்குள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜையுடன் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். பின்னர் அங்கிருந்து அவர் பழனிக்குப் புறப்பட்டுப் போனார். அங்கும் தண்டாயுதபாணி திருக்கோவிலுக்குச் சென்று அவர் சிறப்பு பூஜையுடன் சாமி கும்பிட்டார்.
அவருடன் இரு பெண்களும் வந்திருந்தனர். அதிக கூட்டம் இல்லாமல் அமைதியான முறையில் சசிகலா கோவில்களுக்கு வந்து சென்றார்.
இரு கோவில்களிலும் சாமி கும்பிட வந்தோர், சசிகலாவும் சாமி கும்பிட வந்ததைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
-
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
மதுரை ஜீவிதா நாச்சியார் வர்றாரு.. சசிகலாவின் முக்குலத்தோர் வாக்கு A டூ Z பிளான்.. ஆடிப்போன எடப்பாடி -
TVK Vijay: 234 தொகுதிகளுக்கும் வொர்த்தான ஆள் இருக்காங்களா? வேட்பாளர் தேர்விலும் விஜய்க்கு குழப்பம்! -
பல் போன பாட்டி முதல் பல் முளைக்காத குழந்தை வரை திமுக அரசில் பாதுகாப்பு இல்லை: நடிகை விந்தியா பொளேர் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications