Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம்- முதல்வர் அறிவிப்பு

எய்ம்ஸ் மருத்துவமனைஅமையவுள்ள மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கிழிந்து தொங்கிய தேசியக் கொடி | தோப்பூரில் துணைக்கோள் நகரம்- வீடியோ

    சென்னை: எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்.

    துணைக்கோள் நகரம் என்பது மத்திய பூங்கா, கூட்ட அரங்கம், விழாக்கள் நடத்தும் இடம் என்பன உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படுவது ஆகும். இதன்படி மதுரை தோப்பூர் - உச்சிப்பட்டி இடையே துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

    Satellite city will be formed in Thoppur

    அதன்படி தோப்பூர்- உச்சிப்பட்டி பகுதிகளில் பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வசதி வாரியம் சார்பில் கையகப்படுத்தப்பட்டிருந்த நிலங்களில் தற்போது துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

    இந்த இரண்டு ஊராட்சிகளிலும் மொத்தம் 573.83 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள துணைக்கோள் நகரத்திற்கான மொத்த திட்டமதிப்பீடு ரூ.218.77 கோடி. இங்கு சுமார் 9557 மனைகள் அமைக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை தமிழக அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, ஆட்சியர் வீரராகராவ் ஆகியோர் பார்வையிட்டு கடந்த 19-ஆம் ஆய்வு நடத்தினர்.

    இந்நிலையில் இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் அறிவித்தார். தோப்பூரில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையும் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+