ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்.. சத்யராஜ் வலியுறுத்தல்
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என நடிகர் நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் நெடுவாசல் போராட்டத்துக்கு நடிகர் சத்யராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று சென்னையில் நடிகர் சத்யராஜ் பேட்டி அளித்துள்ளார்.
இயற்கை எரிவாயு என்ற பெயரில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி நெடுவாசல் மக்கள் தீவிர போராட்டத்தில் 14 நாட்களாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயி அமைப்பினர், திரையுலகினர், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், சுற்றுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications