For Daily Alerts
Just In
விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் என்னதான் இருக்கு? தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்
விவசாயிகள் நலன்களுக்கான திட்டங்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் என்னதான் இருக்கிறது என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக விவசாயிகள் வறட்சியால் 400-க்கும் அதிகமானோர் மாண்டு போயுள்ளனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசு, விவசாயிகளின் நலன்களுக்கு என்னதான் நலத்திட்டங்களை வைத்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ளது. இந்த திட்டங்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யவும் தமிழக வேளாண் மற்றும் சட்டத்துறை செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைக்காத நிலையில் அவர் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments
English summary
The Supreme Court today issued a notice to TamilNadu govt on the farmers suicide issue.
Story first published: Monday, May 8, 2017, 16:10 [IST]