ராஜிவ் வழக்கு: 7 தமிழரை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது- மத்திய அரசுக்கே அதிகாரம்: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை; மத்திய அரசுக்குதான் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது. இதனால் 7 தமிழர் விடுதலையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம் ஆயுள்தண்டனையாக குறைத்தது. மேலும் இவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து பேரறிவாளன், முருகன் சாந்தன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி, பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த முடிவை எதிர்த்து அப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இதனைத் தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன பெஞ்ச் அமைக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஜூலை 15-ந் தேதி தொடங்கி 11 நாட்களாக நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் ஆஜராகி இருந்தார்.
அனைத்து தரப்பிலும் இறுதி வாதங்கள் முடிவடைந்து ஆகஸ்ட் 12-ந் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பின் அம்சங்கள்:
- ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளான 7 தமிழரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை.
- சி.பி.ஐ. விசாரித்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதில் பிரச்சனை ஏற்பட்டால் மத்திய அரசுக்குதான் விடுதலை செய்வது தொடர்பான அதிகாரம் உண்டு.
- ஆயுள் தண்டனை என்பது குறிப்பிட்ட ஆண்டுகாலமாக நிர்ணயிக்கப்பட்டால் அதை மாநில அரசு குறைக்க முடியாது.
- சி.பி.ஐ. போன்ற மத்திய அரசின் அமைப்புகள் விசாரித்த வழக்குகளில் மன்னிப்பு போன்றவற்றை மத்திய அரசுதான் வழங்க முடியும்.
இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத் தீர்ப்பு அளித்த தலைமை நீதிபதி ஹெச். எல். தத்து இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications