வகுப்பறையில் மயங்கி விழுந்த 5ம் வகுப்பு மாணவன் மரணம்- போலீசார் விசாரணை
நாமக்கல்: நாமக்கல்லில் பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்த 5-ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் எஸ்.பி. புதூரில் அரசு நிதி உதவி பெறும் அர்த்தனாரி தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோகன் (வயது 10). வழக்கம் போல, நேற்று காலை பள்ளி சென்ற மோகன், வகுப்பறையில் அமர்ந்து பாடங்களை எழுதிக் கொண்டிருந்துள்ளான்.
அப்போது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளான் மோகன். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவர்கள் இதனை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக மோகனை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் பள்ளி ஆசிரியர்கள். அங்கு மாணவனை பரிசோதித்த ஆசிரியர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே மோகனின் மயக்கம் குறித்து நாமக்கல் அருகே எம்.ராசாம்பாளையத்தில் வசித்து வரும் அவனது பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்த மோகனின் பெற்றோர், மகனின் இறப்புச் செய்தி கேட்டுக் கதறி அழுதனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த நாமக்கல் போலீசார், 10 வயது மாணவனின் திடீர் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications