8ம் வகுப்பு மாணவியைக் கடத்தி பலாத்காரம் – 2 கல்லூரி மாணவர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் பள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள பெரியேரி கிராமத்தை சேர்ந்தவர் மாணவியின் தந்தை. விவசாய கூலித் தொழிலாளியான இவரது 13 வயது மகள்தான் அப்பள்ளி மாணவி. இவர் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம், உடல் நிலை சரியில்லாமல் மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் சின்னசாமி என்பவரின் மகன்கள் இருவரும், தனியாக இருந்த மாணவி அர்ச்சனாவை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இரவு வீட்டுக்கு வந்த பெற்றோர்களிடம் மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் படி ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+