ராகிங் கொடுமை தாங்காமல் பள்ளி மாணவர் தீக்குளித்து தற்கொலை
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: நாமக்கல்லில் ராகிங் கொடுமை காரணமாக அரசு பள்ளி மாணவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கருமாபாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவர் கார்த்திகேயன். இவர் ராசிபுரத்தில் உள்ள அரசு பள்ளியில், பள்ளி வளாகத்தி்லேயே அமைந்துள்ள விடுதியில் தங்கியிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று சக மாணவர்கள் அவரை ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த மாணவர் கார்த்தி்கேயன் விடுதியில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தார்.
உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மாணவர் கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications