இலங்கையில் 5 மீனவர்களுக்கு தூக்கு- தங்கச்சிமடத்தில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இலங்கை 5 மீனவர்களுக்கு தூக்கு விதிக்கப்பட்டதால் மீனவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தங்கச்சிமடத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் போதைப் பொருள் கடத்தியதால் தூக்கு தண்டனை விதிப்பதாக இலங்கை நீதிமண்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இதனைக் கண்டித்து ராமேஸ்வரம், தங்கச்சிமடம், அக்காமடம் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று பெரும் போராட்டம் வெடித்தது. சாலை, ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பின்னர் தமிழக அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் இன்று தங்கச்சிமடத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications