வெயில் கொளுத்துகிறது.... நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது: வீடியோ
தமிழகம் முழுவதும் நாளை பள்ளி திறக்கப்படுகிறது. நாளையே இலவச பாடநூல்கள் பள்ளியில் கொடுக்கப்படும் என அதிகாரிகள் என தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அக்னி வெயிலுக்கு கொஞ்சமும் குறைவில்லாத வகையில்கோடை வெயில் கொளுத்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
தமிழநாட்டில் அனைத்து பள்ளிகளிலும் இறுதித் தேர்வு முடிந்து ஏப்ரல் கடைசி வாரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் மே 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

ஆனால் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில்கொளுத்தி வருவதால், பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டு மே 7ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.
ஆனால், தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்களில் கோடை வெயில் இன்னமும் கொளுத்தி வருகிறது. மேலும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நாளை பள்ளி திறந்தவுடனேயே பாடநூல்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications