விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு இல்லை.. ஏப். 25ல் ஸ்கூல் திறந்திருக்கும்.. செங்கோட்டையன் கறார்
விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25ம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் தமிழக அரசு பங்கேற்காது என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு: விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25ம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தின் போது பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் ஏப்ரல் 25-ந் தேதி போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

லாரிகள் ஓடாது
இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. மேலும் மணல் லாரிகளும் ஓடாது என மணல் லாரி உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் எந்த லாரிகளும் 25ம் தேதி ஓடாது.

சினிமா கிடையாது
அதே போன்று சினிமா காட்சிகளும் ஏப்ரல் 25ம் தேதியன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக அன்றைய ஒரு நாள் மட்டும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது.

கடைகள் இருக்காது
முழுஅடைப்பிற்கு ஆதரவளிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் விக்ரமராஜா அறிவித்தார். இதே போன்று சென்னை கோயம்பேடு வியாபாரிகள் சங்கமும் முழு அடைப்பிற்கு அதரவு தெரிவித்துள்ளது.

ஸ்கூல் இருக்கும்
இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறும் முழு அடைப்பில் அரசு பங்கேற்காது என்று ஈரோட்டில் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும், அன்று அனைத்துப் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications