என்ன எப்ப பார்த்தாலும் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்: கணவன் திட்டியதால் புதுப்பெண் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கோவை:கோவையில் எப்பொழுது பார்த்தாலும் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் பயன்படுத்தியதற்காக கணவன் திட்டியதால் புதிதாக திருமணம் ஆன பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அபர்ணா(20) என்பவருக்கும் கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த குமார் என்ற லாரி டிரைவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. குமார் வேலை விஷயமாக வெளியே சென்றுவிடுவார். இந்நிலையில் அபர்ணா எப்பொழுது பார்த்தாலும் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வந்துள்ளார்.

Suicide

இந்நிலையில் குமார் திங்கட்கிழமை தனது மனைவியை திட்டியுள்ளார். என்ன எப்பொழுது பார்த்தாலும் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கிலேயே இருக்கிறாய் என்று திட்டியதுடன் அவரின் செல்போனையும் பறித்து வைத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அபர்ணா வேறு ஒரு செல்போன் மூலம் தனது அண்ணனுக்கு போன் செய்து நடந்தது பற்றி தெரிவித்துள்ளார். அதன் பிறகு அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். குடும்பத்தார் கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.

இதையடுத்து குமார் கதவை உடைத்து பார்த்தபோது அபர்ணா தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. குமார் அபர்ணாவை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மனைவி இறந்த சோகத்தில் குமார் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். அவரை உறவினர்கள் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+