தயே புயல் கரையை கடந்தாலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.. மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
தயே புயல் கரையை கடந்தாலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: தயே புயல் கரையை கடந்தாலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் வடக்கு ஆந்திரா, ஒடிசாவை ஒட்டிய கடற்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மியான்மர் கடற்கரை பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்பகுதியில் நேற்று இரவு புயல் சின்னமாக மாறியது. இதைத்தொடர்ந்து இந்த புயலுக்கு தயே என பெயரிடப்பட்டது.
தயே புயல்
தயே புயல் இன்று அதிகாலை ஒடிசாவின் கோபால்பூர் பகுதியில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது 23 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் புயல் கரையை கடந்தாலும் கடல் கொந்தளிப்புடன்தான் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் வடக்கு ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷாவை ஒட்டிய கடற்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பசலனம்
மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மாலை, இரவு நேரங்களில்
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.