For Daily Alerts
Just In
ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு: தமிழக வீரர் உட்பட 5 ராணுவ வீரர்கள் மாயம்- தேடும் பணி தீவிரம்!
ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி தமிழக வீரர் மூர்த்தி உட்பட 5 ராணுவ வீரர்கள் மாயமாகினர்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி தமிழக வீரர் மூர்த்தி உட்பட 5 ராணுவ வீரர்கள் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வடக்கு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு அருகே முன்னரங்க நிலை ஒன்றில் மூன்று ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் 3 வீரர்களும் சிக்கினர்.
அதேபோல் குப்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் இரண்டு வீரர்கள் சிக்கினர். இந்த 5 ராணுவ வீரர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த என். மூர்த்தி என தெரியவந்துள்ளது. இவர் 36-வது ராஷ்டிரிய ரைபிள் படையணியைச் சேர்ந்தவர்.
Comments
English summary
The Search operations continued for the second day to rescue five soldiers, who went missing after heavy snowfall near Line of Control in north Kashmir.
Story first published: Thursday, December 14, 2017, 0:30 [IST]