மாயமான ஏஎன் 32 விமானம்.. 200 மைல் பரப்பளவில் கடலில் தேடுதல் பணி.. 4 விமானங்கள் தேடுகின்றன!
சென்னை: மாயமான இந்திய ராணுவத்தின் விமானத்தை தேடும் பணியில் விமானப்படையுடன், கடற்படையும் கை கோர்த்துள்ளது.
சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானின் போர்ட்பிளேருக்கு ஏ.என்.32 என்ற விமானம் இன்று காலை 8 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது.
நடுவானில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது காலை 8.30 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
|
கடலில் விழ வாய்ப்பு
அந்த விமானத்தில் பயணித்த 29 பேரின் கதி என்ன என்று தெரியாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விமானம் வங்கக் கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

4 விமானங்கள்
மாயமான விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், வீரர்களை உயிரோடு மீட்க முடியுமா என்ற முயற்சியில் கடற்படையின் 4 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விமானத்தை தேடும் பணியில் 2 டோர்னியர் விமானங்கள் உட்பட நான்கு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பறக்க முடியாது
ஏ.என்.32 வகை விமானங்கள் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் அதிகபட்சமாக 4 மணி நேரம் மட்டுமே பறக்கும் திறன் கொண்டவை. எனவே, இதுவரை விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை வைத்து பார்க்கும்போது அது நொறுங்கி விழுந்திருக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் இத்துறை வல்லுநர்கள்.

200 கடல் மைல் தொலைவு
எனவே சென்னையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் கடலுக்கு அடியில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பயணித்தவர்கள் யார்
இந்த விமானத்தில், கடற்படையை சேர்ந்த 11 வீரர்கள், விமானப்படையை சேர்ந்த 5 வீரர்கள், கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் உட்பட 29 பேர் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications