For Daily Alerts
Just In
வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளம் - தலைமை செயலக ஊழியர்கள் முடிவு
சென்னை: சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புக்காக தங்களது ஒருநாள் சம்பளத்தை வழங்க தலைமை செயலக ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக அரசின் வெள்ள நிவாரணப் பணிகளில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக நிற்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கேற்ற வகையில், தலைமைச் செயலகப் பணியாளர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், வெள்ள நிவாரணப் பணிகளில் தலைமைச் செயலக பணியாளர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவும் தயாராக உள்ளனர். இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Chennai secretariat workers planned to donate their one month salary to flood relief.
Story first published: Wednesday, December 9, 2015, 11:51 [IST]