குஜராத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவல் எதிரொலி.. கூடங்குளத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு
நெல்லை: குஜராத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கூடங்குளம் அணு உலைக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது குஜராத்துக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் வழியாக ஊடுருவியுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பும், ராவும் மத்திய உள்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், நாடாளுமன்றத்தையும் தாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஓரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பாதுகாப்பு தொடர்பான மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடவும், கடலோர கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையம், பணகுடி அருகே மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையம், விஜயநாராயணம் கடறபடை ஆய்வு மையம் ஆகியவற்றில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு தலா 20 பேர் கொண்ட கமண்டோ படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அதிநவீன தூப்பாக்கிகள், இரவு நேரத்தில் துல்லியாக பார்க்க கூடிய பைனாகுலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல கல்பாக்கம் அணு மின் நிலையத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications