காவிரி போராட்டம்: சென்னை எழும்பூர் முதல் சேப்பாக்கம் வரை அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் பகுதியைச் சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: போராட்டக்குழுவினர் முற்றுகையிடலாம் என்பதால் சென்னை சேப்பாக்கம் பகுதி முழுவதும் காவல்துறை வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. போராட்டங்களை நீர்த்துப்போக செய்யும் வகையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்கூடாது என்பது தமிழக போராட்டக்குழுவினரின் வாதம்.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை புறக்கணிப்போம் என்று கூறும் அதே வேளையில் கிரிக்கெட் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். கிரிக்கெட் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுவோம் என்று எச்சரித்தனர்.
எதற்கும் செவி சாய்க்க மறுத்த கிரிக்கெட் சங்க நிர்வாகம், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என்று கூறவே, பரபரப்பு பற்றிக்கொண்டது. கிரிக்கெட் போட்டியை நடத்த விட மாட்டோம் என்று பலரும் களமிறங்கவே, மைதானத்திற்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடும் எதிர்ப்பை மீறி கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மட்டும் இன்றி அனைத்து சாலைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சி.எஸ்.கே அணி வீரர்கள் தங்கி உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலுக்கு தீவிரபதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொல்கத்தா அணி வீரர்கள் தங்கியுள்ள எழும்பூர் ராடிசன் புளூ ஓட்டலுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமருக்கு இணையாக பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அண்ணாசாலை, எழும்பூர், சேப்பாக்கம் சாலைகளில் கூட்டமாக நிற்கவோ, செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரை சாலையும் காவல்துறையினரின் கட்டுப்பாடு காரணமாக வெறிச்சோடியுள்ளது. வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் தடுத்து நிறுத்தப்பட்டு பலத்த சோதனை, விசாரணைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு நிலவுகிறது. வரலாறு காணாத பாதுகாப்புடன் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications