நாளை டிசம்பர் 6.. சென்னை ரயில் நிலையங்களில் உஷார்.. 5 அடுக்கு பாதுகாப்பு!
சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினம் நாளைய தினம் அனுசரிக்கப்படுவதை யொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் டிசம்பர் 6ம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் புதன்கிழமை முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் உள்ள ‘மெட்டல் டிடக்டர்' கதவு வழியாகவே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகள் உடைமைகளும் ‘ஸ்கேனர் கருவி மூலம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பிளாட்பாரங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்களும் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பயணிகளோடு, பயணிகளாக மாறுவேடத்திலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில்வே காவலர்கள் 250 பேரும், ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் படையினர் உள்பட 350 பேர் 2 ஷிப்ட்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், எழும்பூர் ரயில் நிலையமும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 60 பாதுகாப்பு படை வீரர்கள், ரயில்வே காவலர்களுடன் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று தாம்பரம், மாம்பலம், பெரம்பூர், அரக்கோணம் உள்பட ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் ரயில் நிலையம் மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில்களில் பார்சல் அனுப்புவதற்கு தடை விதிக்கப்படவில்லை என்றாலும், பார்சல் பிரிவு, பார்சல் ஏற்றப்படும் ரயில் பெட்டிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பார்சல்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே ரயில்களில் ஏற்றப்படுகின்றன.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications