For Daily Alerts
Just In
234 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளைத் தொடங்குகிறோம்.. சீமான்
கோவை: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிககளையும் தொடங்கப் போகிறோம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
இன்னும் ஒரு மாத்தில் தேர்தல் பணிகள் தொடங்கும் என்றும் சீமான் கூறியுள்ளார். கோவை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
2016 சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் ஒரு மாதத்தில் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்க உள்ளோம். 2016 தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிட உள்ளோம்.
11 தொகுதிகளில் ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காமராஜர் பிறந்தநாள் விழாவில் 10 வேட்பாளர்களையும், சிவாஜி கணேசன் நினைவு தினத்தில் சில வேட்பாளர்களையும் அறிவிக்க உள்ளோம்.
ஒரே மாதத்தில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்து தேர்தல் பணிகளைத் தொடங்க உள்ளோம் என்றார் சீமான்.
Comments
English summary
Naam Tamilar party chief Seeman has said that he will announce candidates for all 234 seats within a month.
Story first published: Sunday, July 12, 2015, 14:14 [IST]