ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 53வது நாளாக மக்கள் போராட்டம்: மீண்டும் சீமான் பங்கேற்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சீமான் இன்று மீண்டும் பங்கேற்கிறார்.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அ.குமரெட்டியாபுரம் கிராம மக்களின் போராட்டம் 53வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மீண்டும் பங்கேற்கிறார்.

ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உடல்நலத்திற்கும் கேடு விளைவிப்பதாகவும், அரசு அந்த ஆலையை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து அறவழி முறையில் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்தப் போராட்டம் இன்று 53வது நாளை எட்டியுள்ளது.

 Seeman to attend Sterlite Protest for the second time

மக்களின் இந்தப் போராட்டத்திற்கு தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆதரவு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை குறித்து அதன் அதிகாரிகள் நடத்த இருந்த பத்திரிகையாளர் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் இரண்டாம் முறையாக பங்கேற்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விமானம் வழியாக இன்று நண்பகலில் தூத்துக்குடிக்கு செல்ல இருப்பதாக அக்கட்சியின் தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+