ஈழத் தமிழரை கொன்ற காங்கிரஸை புதுவையில் ஆதரிப்பதா? திருமா மீது சீமான் பாய்ச்சல்
ஈழத் தமிழரை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியை புதுவையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஈழத் தமிழரை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியை புதுவையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் கூறியுள்ளதாவது:
ஈழத் தமிழரை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியை புதுவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்படி ஆதரிக்கலாம்? டெல்லியில் இன்று மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

40 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் மீனவர் பிரச்சனை தீரப்போவதில்லை. சிறுவாணியில் அணை கட்ட கேரளாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை நாம் வரவேற்கிறோம்.
தமிழர்களின் தொடர் போராட்டத்தால்தான் மத்திய அரசு இந்த தடையை விதித்துள்ளது.
இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications