'கொள்ளையர்'களை விரட்ட காசு வாங்காத 75% பேர் ஓட்டுப் போட்டாலே போதும்.. சீமான்
சிதம்பரம்: தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் 25 சதவீதம்பேரால்தான் இந்த மாநிலத்தை விட்டு கொள்ளையர்களை விரட்ட முடியாத நிலை உள்ளது. காசு வாங்காத, மீதம் உள்ள 75 சதவீதம் பேரும் ஓட்டுப் போட முன்வந்தாலே போதும் தமிழகத்தை விட்டு திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கொள்ளையர்களையும் விரட்டி விடலாம் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் தலைவர் சீமான்.
புவனகிரி, காட்டுமன்னார்குடி, சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிதம்பரத்தில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், தேர்தலில் பணத்தை பெற்று கொண்டு வாக்கு அளிப்பவர்கள் 25 சதவிகிதம் பேர்தான். மீதமுள்ள 75 சவீதம் பேரும் வாக்களிக்காமல் உள்ளனர்.
அவர்களும் வாக்களித்தால், வாக்களிக்க முன்வந்தால் மட்டுமே அதிமுக, திமுக ஆகிய இரு கொள்ளையடிக்கும் கட்சிகளையும் அகற்ற முடியும். 100 சதவீத வாக்குப் பதிவை மக்கள் உறுதி செய்ய வேண்டும்.
தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பணத்தைகொடுத்து அடிமைபடுத்தியுள்ளனர் இந்த இரு கட்சியினரும். கனிம வளங்களையும், தண்ணீர், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்களையும் இந்த இரு கட்சிகளும் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து கொள்ளையடித்து அவர்களது கஜானாக்களை நிரப்பிவிடடனர்.
இயற்கை வள கொள்ளையால் காடுகளில் உள்ள மிருகங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் மனிதர்கள் வாழும் இடங்களுக்கு படையெடுக்கிறது. பறவை இனங்கள் அழிவை நோக்கி செல்கிறது.
தமிழகத்தில் மட்டும் தான் தமிழக முதல்வர்களாக இருப்பவர்கள் சாரய ஆலைகளுக்கு முதலாளியாக இருக்கிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் இல்லை என்றார் அவர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications