கர்நாடகா சுயநலத்துடன் செயல்படுகிறது.. அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடப்பாடியார் குற்றச்சாட்டு!
கர்நாடகா சுயநலத்துடன் செயல்படுகிறது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: கர்நாடகா சுயநலத்துடன் செயல்படுகிறது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தமிழக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், சீமான், வைகோ, ஜிகே வாசன், திருமாவளவன், பாமக சார்பில் ஏகே மூர்த்தி, தேமுதிக சார்பில் சுதீஷ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல்வர் தலைமையில்
இந்த அனைத்துக்கட்சி கூட்டம் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திற்கு பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது.

முதல்வர் குற்றச்சாட்டு
இந்நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கர்நாடகத்தின் சுயநலம் தான் காவிரி பிரச்சனை உருவாக காரணம் என்று குற்றம்சாட்டினார்.

விதிகளை மீறி அணைகள்
கர்நாடகத்தின் சுயநலப்போக்கு இன்றுவரை மாறவில்லை என்று தமிழக முதல்வர் பேசியுள்ளார். விதிகளை மீறி கர்நாடக அரசு அணைகள் கட்டியதாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முதல்வர் கூறினார்.

தமிழகத்தின் உரிமை
மேலும் காவிரியில் தமிழகத்தின் உரிமையை அரசு விட்டுக்கொடுக்காது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications