சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பு விழா: விடைபெற்றார் ஆளுநர் வித்யாசாகர்!
தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவுக்கு சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் விடைபெற்றார். மும்பை புறப்பட்ட அவருக்கு சென்னை விமான நிலையத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி முதல் வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பு ஆளுநராக பதவி வகித்த வந்தார்.

ஓராண்டுக்குப் பிறகு தமிழகத்துக்கு புதிய ஆளுநராக மேகாலயா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை குடியரசுத் தலைவர் அண்மையில் அறிவித்தார். இதையடுத்து பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மும்பை புறப்பட்டார்.
அவருக்கு சென்னை விமான நிலையத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சென்னை வரவுள்ளார். தமிழக ஆளுநராக அவர் நாளை பதவி ஏற்கவுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications