Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதையில் புதிய குகை அமைக்கும் பணி தீவிரம்

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை: செங்கோட்டை - புனலூர் இடையேயான அகல ரயில் பாதையில் புதிய குகை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் இடையேயான செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 80 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

Sengottai-Punalur Gauge conversion to be completed in 2017

இந்நிலையில் இந்த தடத்தில் புதியதாக ஆறாவது குகை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2015 ஏப்ரலில் இதற்கான ஒப்பந்த்த புள்ளியை வெளியிட்டது ரயில்வே வாரியம். இந்த பணியை தனியார் நிறுவனம் தொடங்கியது. ஏற்கனவே இருக்கும் குகைகள் தமிழக எல்லை பகுதிக்குள், 13 கி.மீ., தூரம் அமைந்துள்ளது. அதேபோல் கேரள மாநில பகுதிக்குள், 36.38 கி.மீ., தூரம் கொண்டதாக செல்கிறது. ஏற்கனவே 60 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது.

இந்த பாதையில், ஐந்து குகைகள் உள்ளன. இவற்றில் சுமார் 80 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தற்போது புதியதாக அமைக்கப்படும் குகையானது ஆரியங்காவு - தென்மலை இடையே, மூன்றாவது குகையில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டு வருகிறது.

Sengottai-Punalur Gauge conversion to be completed in 2017

செங்கோட்டை புனலூர் அகல ரயில் பாதைக்காக புதிய குகை அமைக்கும் பணியும் தீவிரம் அடைந்துள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் முழுமையான பணிகள் முடிவடையும் என்று கூறப்படுகிறது. செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதை பணி தற்போது முழுமையாக 80 சதவிகிதத்தை எட்டியுள்ளது. இன்னும் 5 முதல் 6 மாதத்திற்குள் பணியை முடித்து 2017 ஆம் ஆண்டு துவக்கத்தில் இந்த தடத்தில் ரயிலை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+