ஓட்டுக்கு பணம் தருவோரை பார்த்து அழுகை வருகிறது.. சிவகாசி முதியவரின் ஆதங்கம்
சென்னை: சிவகாசியில் மழைக்கு நடுவே, ஆறுமுகம் என்ற மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட முதியவர், இரும்பால் ஆன நான்கு கால் கைத்தடியை பயன்படுத்தி 2 கி.மீ நடந்து சென்று வாக்களித்துள்ளார். இந்த தூரத்தை கடக்க இரண்டரை மணி நேரம் ஆகியுள்ளது அவருக்கு.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஓட்டோட அருமை பெருமையை உணர்ந்தவன் நான். என்னோட ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தாங்ககிட்ட நான் வாங்க மாட்டேன்னு சொல்லிவிட்டேன். அந்தக் காலத்துல வெள்ளைக்காரன்கிட்ட பணம் கொடுத்தா விடுதலை வாங்கினாங்க? அடிபட்டாங்க.. உதைபட்டாங்க, உயிரையும் விட்டாங்க.

விடுதலையோட மதிப்பு இப்போ உள்ள மக்களுக்கு தெரியவில்லை. அதனாலத்தான், நாட்டை பற்றி கவலைப்படாமல், ஓட்டுக்கு விலை வைத்துள்ளனர். பெற்ற தாயை ஒருத்தன் அவமானப்படுத்தினா, பிள்ளை பார்த்துக்கொண்டிருக்க மாட்டான். ஆனால், வீட்டுக்கு வீடு ஓட்டுக்கு பணம் கொடுத்து நாட்டையே தலை குனிய வச்சிருக்காங்க.
என் உடம்பில் தெம்பு இருந்திருந்தால் பணம் தர வந்தவர்களை அடித்திருப்பேன். நாட்டை நாசமாக்கிட்டாங்களேன்னு எனக்கு அழுகைதான் வந்தது. அந்தக் கோபத்தை மனசுக்குள்ள வச்சிக்கிட்டுத்தான் ஓட்டு போட்டேன்.












Click it and Unblock the Notifications