முதுபெரும் ஜனதா தளத் தலைவர் ஜி.ஏ. வடிவேலு காலமானார்!!
தருமபுரி: முதுபெரும் சோஷலிஸ்ட் மற்றும் ஜனதா தளம் தலைவரான ஜி.ஏ. வடிவேலு காலமானார். அவரது உடலுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தருமபுரி மாவட்டம் அன்னசாகரம் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜி.ஏ.வடிவேலு. அவருக்கு வயது 91.
1925ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி பிறந்தவர் ஜி.ஏ. வடிவேலு, 12-6-1925 ம் ஆண்டு பிறந்தார். தொடக்க காலத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றினார்.

ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தம்முடைய பணியை ராஜினாமா செய்தார். தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியிலும் பின்னர் லோகியா தலைமையிலான சோஷலிஸ்ட் கட்சியிலும் தீவிரமாக பணியாற்றியவர் ஜி.ஏ. வடிவேலு,
ஜனதா தளம் கட்சின் மாநிலத் தலைவராகவும் அதன் அகில இந்திய துணை தலைவராகவும் பணியாற்றினார் வடிவேலு. 2002-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்தார்.
முதுபெரும் சோஷலிஸ்ட் தலைவரான வடிவேலு, முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் தருமபுரியில் காலமானார். அவரது உடலுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். ஜி.ஏ. வடிவேலு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications