மூத்த பத்திரிகையாளர் சுந்தரவடிவேல் காலமானார்
மூத்த பத்திரிகையாளர் சுந்தரவடிவேல் காலமானார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மூத்த பத்திரிகையாளர் சுந்தரடிவேல்(வயது 57) மாரடைப்பால் சென்னையில் இன்று அதிகாலை காலமானார்.
சென்னை பிரஸ் கிளப்பின் முன்னாள் செயலாளரான சுந்தர வடிவேலு தினகரன் நாளிதழில் நீண்ட காலம் செய்தியாளராகப் பணியாற்றினார். பின்னர் இமயம் தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சுந்தரவடிவேல் காலமானார். சென்னை திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் இருந்து அவரது உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கோவிலூருக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications