கொடநாட்டில் ஓபிஎஸ், நத்தம் சொத்து ஆவணங்கள்? கொள்ளையடிக்க முயன்றது மூத்த அமைச்சர்? சசி சந்தேகம்
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் மூத்த அமைச்சர் ஒருவருக்கு தொடர்பிருக்கலாம் என சசிகலா தரப்பு சந்தேகிக்கிறது.
சென்னை: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதனிடம் இருந்து பறிக்கப்பட்ட சொத்து ஆவணங்கள் இருந்ததாகவும் இதை எடப்பாடி கோஷ்டியைச் சேர்ந்த மூத்த அமைச்சர்தான் எடுக்க முயற்சித்திருக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு சந்தேகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதாவின் மரணத்தைப் போட கொடநாடு எஸ்டேட் பங்களா கொலை, கொள்ளை சம்பவமும் மர்மமாகவே நீடிக்கிறது. இந்த வழக்கை எப்படியும் ஒன்றுமில்லாமல் முடித்துவிட வேண்டும் என்பதில் போலீஸ் அதிதீவிரம் காட்டுவதே பல சந்தேகங்களை எழுப்புகிறது.

ஜெ. கடிகாரங்கள்...
ஜெயலலிதாவின் விலை உயர்ந்த கைகடிகாரங்களை திருடினார்கள் என்று போலீஸ் கூறியது. இதற்கு ஆதாரமாக அவரது படம் போட்டிருந்த, அதிமுக அதிதீவிர தொண்டர்கள் கட்டும் கடிகாரங்களை காட்டி எங்கப்பன் குதிருக்கு இல்லை என சொன்னது போலீஸ்.

கனகராஜ் மர்ம மரணம்
பின்னர் ரூ200 கோடி பணத்தை கொள்ளையடிக்க வந்தனர் என புதியதாக ஒரு கதையை கட்டியது. ஆனால் கொடநாடு கொலை, கொள்ளையின் முக்கிய குற்றவாளியான கனகராஜின் மர்ம மரணம் குறித்து வாய்பேச மறுக்கிறது போலீஸ்.

ஓபிஎஸ், நத்தம் ஆவணங்கள்
இந்த நிலையில் கடந்த சட்டசபை தேர்தலின் போது ஓபிஎஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதனிடம் இருந்து சசிகலா கோஷ்டி பறித்த சொத்து ஆவணங்கள்தான் கொடநாடு பங்களாவில் வைக்கப்பட்டிருந்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆவணங்களை எடப்பாடி கோஷ்டியைச் சேர்ந்த சிலர் அபகரிக்க முயற்சித்ததாக சசிகலா தரப்பு சந்தேகிக்கிறது.

மூத்த அமைச்சருக்கு தொடர்பு?
இது தொடர்பாக மூத்த அமைச்சர் ஒருவரிடமும் சசிகலா தரப்பு விசாரித்திருக்கிறது. ஆனால் தாமே முதல்வர் என கெத்தாக வலம் வரும் அந்த 'மணி' அமைச்சர் சசிகலா தரப்புக்கு தெனாவெட்டாக பதில் சொல்லி இருக்கிறது. இதனால் சசிகலா கோஷ்டி கடும் கோபத்தில் இருக்கிறதாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications